ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடு குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி அந்த பதவியினை சஜித் பிரேமதாசவிடம் கையளிக்க வேண்டுமென்று கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ஆனால், கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பதற்கு தயாரில்லை என்று ரணில் விக்கிரமசிங்க விடாப்பிடியாக இருந்து வருகின்றார்.
இவ்விடயம் குறித்து பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதிலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி ஒன்றிணை அமைத்து போட்டியிடுவது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டுக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் சபாநாயகர் கருஜயசூரியவை கடந்த சனிக்கிழமை சஜித் பிரேமதாச சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்தே நேற்று முன்தினம் இரவு கருஜயசூரிய ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்புக்குமிடையில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கருஜயசூரிய ஈடுபட்டுள்ளார்.
நேற்றைய தினம் தலைமைத்துவ விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM