இந்நியாவின் குஜராத் மாநிலம் சூரத் பகுதில் அமைந்துள்ள 10 மாடிகள் கொண்ட ஆடை வணிக வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
ரகுவீர் எனும் குறித்த வணிக வளாகம் இயங்கி வந்த 10 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலையில் தரைதளத்தில் இருந்த கடை ஒன்றில் தீ பற்றியுள்ளது. தீயானது அடுத்தடுத்தக் கடைகளுக்கும், அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதில் மொத்த கட்டிடமும் கொழுந்து விட்டு எரிந்து தீப்பிழம்பாக காட்சியளித்தது.
அங்குள்ள கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொலிஸ்டர் ரக துணிகள் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 57 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில தீயணைப்பு வாகனங்களும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடந்த 8 ஆம் திகதியும் இதே கட்டிடத்தின் 4வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது முறையான தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததற்காக அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM