(ஆர்.யசி)
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு(கோபா குழு) உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடனான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பாரளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.
இந்தத் தெரிவுக்குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
இதில் உறுப்பினர்களாக சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி.சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, லஷ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரவணக்க, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த 17 உறுப்பினர்களும் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களாகச் செயற்படுவர். இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதேபோல் அரசியலமைப்பு பேரவையும் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம், நீதித்துறை உள்ளிட்டவற்றின் உயர்பதவிக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானத்தை அரசியலமைப்பு பேரவையே எடுத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM