பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்.
கொழும்புவாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக் காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். இந்த விதிகளைமீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரத்தை அலங்கரிக்கும் நடவடிக்கைதொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை பஸ்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடல்கள் இடம்பெறாதுவிட்டால் அது தொடர்பாக 119 என்ற தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM