(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு பங்குச்சந்தை நிறுவன பிரதானிகள் இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதகேடந்த நான்கரை வருட காலமாக கொழும்பு பங்குச்சந்தை சடுதியாக வீழ்ச்சியடைந்தமையினால் பங்குச்சந்தை நிறுவனங்கள் மூடப்பட்டன .இதன் காரணமாக பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். என பங்குச்சந்தை நிறுவன பிரதானிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தார்கள்.
பல்வேறு புதிய சட்ட நெறிப்படுத்தலினால் பங்குச்சந்தைகள் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை பிரதானிகள் சங்கத்தினர் இதன்போது பிரதமருக்கு தெளிவுப்படுத்தினர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் கடந்த நான்கரை வருட கால நிர்வாகத்தில் தேசிய பொருளாதாரம் 15 வருடத்திற்கு முற்பட்ட காலத்ததை போன்று பின்தங்கிய நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகின்றது. வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தையினை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM