தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய யுவதியொருரை அவரது சொந்தத் தாயார் உயிருடன் எரித்துப் படுகொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
ஸீனத் ரபீக் (18 வயது) என்ற யுவதியே இவ்வாறு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கிழக்கு பாகிஸ்தானில் லாகூர் நகரிலுள்ள வீட்டில் அவரது தாயாரான பர்வீன் ரபீக்கும் சகோதரனும் அவரை கட்டிலுடன் சேர்த்துக் கட்டிய பின் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி அவருக்கு தீ வைத்துள்ளனர்.
தனது மகள் தம்மால் பாரம்பரிய முறைப்படி செய்து வைக்கவிருந்த திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் இயந்திரவியலாளரான தனது காதலர் ஹஸன் கானை நீதிவான் நீதிமன்றமொன்றில் கடந்த மாதம் திருமணம் செய்ததால் சினமடைந்தே அந்தத் தாயார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படுகொலை இடம்பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக ஸீனத் தங்கியிருந்த இடத்திற்கு விஜயம் செய்த பர்வீன் ரபீக்கும் மாமா ஒருவரும் அவரை வீடு திரும்ப ஊக்குவித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் ஸீனத்திடம் பாரம்பரிய முறைப்படி மீண்டும் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் இல்லையெனில் அவர் வாழ்க்கை முழுவதும் காதலனுடன் ஓடிப்போனவர் என்ற அவப்பெயருடன் வாழ நேரிடும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களுடன் சென்றால் காதலருடன் சென்றமைக்காக அவர்கள் தன்னைக் கொல்லலாம் என அஞ்சிய ஸீனத், தன்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம் என தனது தனது கணவரிடம் கோரியுள்ளார்.
எனினும் குடும்ப உறுப்பினர்கள் அவரை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் சென்றனர்.
“ என்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம். அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்" என அவர் தெரிவித்ததாக ஸீனத் தெரிவித்ததாக அவரது கணவர் கூறினார்.
பாகிஸ்தானில் குடும்ப கௌரவத்துக்காக வருடந்தோறும் சுமார் 1,000 பெண்கள் வரை கொல்லப்பட்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM