முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார் .
குறிப்பாக தற்போது நாட்டில் புதிய அரச தலைவர் பொறுப்பேற்ற பின்னர், முல்லைத்தீவு - உண்ணாப் பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலையில், 60 வைத்தியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில், வெறுமனே 28 வைத்தியர்களே பணியாற்றுவதாக தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக பாரிய வைத்தியர் வெற்றிடம் நிலவுவதன் மூலமே அதிகளவான மரணச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் உரியவர்களுடன் பேசி மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM