மலையக மக்கள் முன்னணியில் தீர்மானங்கள் தனிப்பட்ட ரீதியில் ஒரு சிலரால் மாத்திரமே எடுக்கப்படுகின்றன. எமது கட்சி தற்போது ஜனநாயக ரீதியில் செயற்படுவதில்லை. சர்வாதிகாரப் போக்கே தலைதூக்கியுள்ளது என கட்சியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொட்டகலையில் ஒரு ஊடக சந்திப்பொன்றில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், கட்சியின் எவ்வித அனுமதியுமின்றி பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அத்தீர்மானத்தால் கட்சியை சிதைத்துவிடக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மலையக மக்கள் முன்னணி என்பது சந்திரசேகரன் என்பவரினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தனித்துவமான கட்சியாகும். இருந்தபோதும் அன்று கட்சி என்ற ரீதியில் ஒரு ஜனநாயகத் தன்மை காணப்பட்டது. இன்று அது சிதைவடைந்து வருகின்றது. கட்சி என்ற வகையில் நிதிச் செயலாளர் என்பவருக்கு ஊடகங்களில் அறிக்கை விட முடியாது.
பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் முடிவு எடுக்கப்படவிருந்த நிலையில், அது சாத்தியப்படாமல் போனது. இருப்பினும், அண்மையில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பெ.இராதாகிருஷ்ணனினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் கட்சியில் மூன்று பேருக்கு மாத்திரமே தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் அனுஷா சந்திரசேகரன் வேண்டுமானால் தனிப்பட்ட ரீதியில் போட்டியிடலாம் என தெரிவித்திருந்தார்.
மேற்படி அறிவிப்பு கூட கட்சியின் யாப்புக்கு முரணானது. ஏனென்றால் கட்சி யாப்பின்படி கவுன்சில் தலைவர்கள், மத்திய குழு மற்றும் தேசிய சபை என்பன இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்தின் படியே நடக்க வேண்டும். ஆனால் தற்போது கட்சியில் சர்வாதிகாரப் போக்கே காணப்படுகின்றது. நிதிச் செயலாளரினாலும் தலைவரினாலுமே தன்னிச்சையாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறாக கட்சியில் தொடர்ந்தும் சர்வாதிகார போக்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாகவே மக்கள் மாற்று தரப்பினரை விரும்புகின்றனர். இவை தவிர இளைஞர் யுவதிகளும் இன்று கட்சியில் ஒரு மாற்றத்தையும் ஒரு சிறந்த இளம் தலைமைத்துவத்தையும் எதிர்பார்க்கின்றனர். எனவேதான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM