பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி இரு தரப்புக்குமான உறவுகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அந்நாட்டுக்கு வருவதற்கு விண்ணப்பிக்கும் குறைந்த தகைமைகளைக் கொண்ட குடியேற்றவாசிகள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய டெலிகிராப் ஊடகம் தெரிவிக்கிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்குப் பின்னரான இரு வருட காலங்களுக்குள் குடியேற்றவாசிகள் தொடர்பான நிலைமை குறித்து போரிஸ் ஜோன்ஸனின் உதவியாளர்களால் திட்ட வரைபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகக் குழுக்களின் கோரிக்கைக்கு அமைய தற்போதுள்ள சட்டவிதிகளுக்கு 2023ஆம் ஆண்டுவரை கால நீடிப்பு வழங்குவதாக முன்னாள் பிரதமர் தெரேஸா மே உறுதியளித்திருந்த நிலையில் அந்த நீடிப்பு நீக்கப்படவுள்ளதாகவும் மேற்படி ஊடக செய்தி தெரிவிக்கிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கான பிறிக்ஸிட் செயற்கிரமத்தை முன்னெடுப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 31ஆம் திகதியாகும்.
அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் உள்ளடங்கலாக அனைத்து இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் தொடர்பில் இறுதியான தீர்மானமெடுத்து பிறிக்ஸிட்டை உறுதிப்படுத்துவதற்கான காலத் தவணை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியாகும்.
இந்நிலையில் அதிகார கை மாற்ற காலத் தவணை நிறைவடைந்த முதல் நாளே தகைமை குறைந்த குடியேற்றவாசிகளுக்கான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த போரிஸ் ஜோன்ஸன் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனங்கள் குறைந்த தகைமையுடைய குடியேற்றவாசி பணியாளர்களை இந்த வருட இறுதியில் கட்டுப்படுத்த தயாராக வேண்டியுள்ளது என பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் கூறுகிறது.
வர்த்தகக் குழுக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வர்த்தக மற்றும் தகைமை குறைந்த குடியேற்றவாசிகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகளை மேலும் ஒரு வருட காலத்திற்கு அல்லது இரு வருடங்களுக்கு நீடிக்க பிரித்தானியா கோரும் என இதுவரை காலமும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிரித்தானியாவின் எதிர்கால குடிவரவு முறைமை தொடர்பான ஆவணத்தின் அங்கமாக குறைந்த தகைமைகளைக்கொண்ட குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரேரணைகளை பிரித்தானிய உள்துறை செயலாளர் பிரீதி பட்டேல் இந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரிஸ் ஜோன்ஸன் குடியேற்றவாசிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் நடை முறையிலுள்ள புள்ளியிடல் அடிப்படையிலான குடிவரவு முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தேர்தல் பிரசார காலத்தில் பிரித்தானியாவில் குறைந்த தகைமைகளைக் கொண்ட தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை அவதானிக்கப்படாதவரை அத்தகைய தகைமைகளைக்கொண்ட குடியேற்றவாசிகள் பிரித்தானியாவுக்குள் வருவதைத் தடுக்க வழிவகை செய்யும் திட்டமொன்றை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கான பிறிக்ஸிட் செயற்கிரமம் முன்னெடுக்கப்பட இரு வாரங்களேயுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் கூடி பிறிக்ஸிட் செயற் கிரமம் தொடர்பில் தீவிர பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய் திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM