இந்தியாவில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழாவை முன்னிட்டு, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தின் திண்டுக்கல் நாகல்நகா் ஜும்ஆ பள்ளிவாசலில் கந்தூரி விழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 18 ம் திகதி இரவு, மத நல்லிணக்கத்திற்காக உயிரிழந்தவா்களுக்காக மெளலது ஷரீப் என்னும் துஆ நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, மறுநாள் (19ம் திகதி) காலை, ரசூலுல்லா கந்தூரி விழா நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, சுமார் 2 ஆயிரம் கிலோ அரிசி, 300 கிலோ மட்டன் கொண்டு பிரியாணியும், 200 கிலோ தயிர் கொண்டு வெங்காய பச்சடியும் தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, நேற்று (19ம் திகதி) காலை 7 மணி முதல், மதியம் ஒரு மணி வரை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாகல்நகர், பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கிச் சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாகல் நகா் பள்ளிவாசல் தலைவா் பி.அகமது புகாரி, செயலா் ஏ.கே.அலாவுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM