(ஆர்.யசி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்காது வெறுமனே அபிவிருத்தி என்ற கதைகளை மாத்திரம் கூறிக்கொண்டு ஜனாதிபதி வடக்கு விஜயத்தை மேற்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அபிவிருத்தியை நாம் நிராகரிக்கவில்லை ஆனால் அரசியல் தீர்வே முதன்மையானதாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்மாத இறுதியில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள நிலையில் வடக்கின் தமிழ் அரசியல் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டநாட்கள் கோரிக்கையான ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM