பனைசார் உற்பத்தி பொருட்களை Online மூலம் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் யாழ். மாவட்டச் சமுர்த்தித் திணைக்களப் பணிப்பாளர் க.மகேஸ்வரன் ஆகியோர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்..
குறித்த விஜயத்தின் போதே பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விஜயத்தின் போது பனைசார் உற்பத்தி பொருட்களையும் பனையின் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கபப்படும் உற்பத்தி பொருட்களும் பார்வையிடப்பட்டது.
இவ் விஜயத்தின் போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாண முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் போதியளவு சந்தை வாய்ப்பு அற்ற தன்மை காணப்படுவதாகும்.
அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி ,இராஜங்க அமைச்சர் தாரக பாலசூரிய கூறியது போன்று “ஒரு அமைச்சர் தன்னுடைய அமைச்சின் கீழ் உள்ள வேலைகளை மட்டும் முதலுரிமைபடுத்தி செய்யாமல் தனது அமைச்சால் பகிரக்கூடிய வேலைத்திட்டங்களையும் செய்யவேண்டும்”
அவ்வாறு செய்தாலே உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். எனவும் பனைசார் உற்பத்தி பொருட்கள் Online மூலம்சந்தைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM