தமிழகத்தில், 5 தலைமுறைகள் கண்ட 101 வயது மூதாட்டி ஒருவர் தனது பிறந்த நாளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரைச் சேர்ந்தவர் செங்காத்தாள் (101). இவரது கணவர் கந்தசாமி இறந்துவிட்டார். செங்காத்தாளின் வம்சாவளியில் தற்போது 5 மகள்கள், 5 மருமகன்கள், 16 பேரன்கள், 16 பேத்திகள், 20 கொள்ளுப்பேரன்கள், 14 கொள்ளுப் பேத்திகள், 6 எள்ளுப் பேரன்கள், 4 எள்ளுப் பேத்திகள் என, மொத்தம் 86 பேர் உள்ளனர்.
செங்காத்தாளின் மகள்கள் 5 பேரும் திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்றனர். 5 தலைமுறைகள் கண்ட செங்காத்தாளுக்கு நேற்று (17.01.2020) 101 ஆவது பிறந்த நாள். இதையொட்டி, குடும்பத்தினர் 86 பேர் உட்பட ஊர் மக்கள் அனைவரும் அங்கு உள்ள காமாட்சியம்மன் கோயிலில் ஒன்று கூடினர்.
அங்கு, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். இதையடுத்து, வந்திருந்த அனைவரும் செங்காத்தாளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் செங்காத்தாள் குடும்பத்தினர் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM