தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவும், தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரித்தால்வதற்காகவும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைப் பதற்குமான சதியை இந்த அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாகச் செயற்பட்டு வருவதாக முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறு பாண்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய ஒரு தேர்தலாக வருகின்ற தேர்தலை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த அரசாங்கத்தின் வருகையோடு இன வாதத்தையும் மத வாதத்தையும் கக்கி அதை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்கின்றவர்கள் இந்த நாட்டிலே எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டுமென்று சிறுபான்மையினருக்கான பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற உரிமைகளைக் கூட இல்லாமல் ஆக்க வேண்டும் என்று பேசி வருவதை நாங்கள் பார்க்கிறோம்.
அதே போல இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டிலே ஜனநாயக அரசியலுக்குள் வந்த சிறுபான்மை கட்சிகள் சிறிய கட்சிகளை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரம் பேசுகின்றவர்களும் இந்த அரசாங்கத் தில் ஒரு ஆதரவாளர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நிலை இந்த நாட்டிலே சிறு கட்சிகளையும் சிறுபான்மை சமுதாயத்தையும் ஜனநாய கத்தை நம்பி வாழுகின்ற மக்களுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற ஒரு சதியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
எனவே வரப்போகின்ற தேர்தல் இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்புகின்றவர்கள் இந்த நாட்டிலே எதிர்காலத்தில் ஒரு இனக்கலவரம் வந்து விடாமல் எதிர் காலத்திலே எல்லோரும் சமூகமாகச் சகோதரத்துவத்துடனும் சமாதானமாகவும் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்கின்ற ஒரு நிலை வர வேண்டுமாக இருந்தால் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகத் தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தால்வதற்காக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்கான சதியை இந்த அரசாங்கத்தின் முகவர்கள் என்று மாவட்ட ரீதியாகச் செய்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்.
எனவே இந்த தேர்தலிலே அவ்வாறான சதிகாரர்களின் சதி வலைக்குள் சிறுபான்மைச் சமூகம் ஏமாந்து விடாமல் ஒன்று பட்டு தங்களுடைய பிரதிநிதிகளை தமக்காகத் தைரியமாக தன்மானத்தோடு வாழ ஒரு நிலையை சமூகத்துக்கு ஏற்படுத்துவதற்காக உழைக்கின்ற பாராளுமன்ற பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM