சிரிய அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் கட்டப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களில் அந்நாட்டு அரசாங்கப் படையினர் புதன்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அலெப்போவில் ஷார் பிரதேசத்திலுள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
அல மர்ஜா பிராந்தியத்தில் பீப்பா குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பலியானவர்களில் இரு சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.
மேற்படி சம்பவத்தில் பகுதியாக இடிந்து விழுந்த கட்டமொன்றின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் 23 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக வைட் ஹெல்மெட் அமைப்பைச் சேர்ந்த மீட்புப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM