இரத்தினபுரி மாவட்டத்தில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் அழைக்க தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பே கடுவ தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதைப்பொருள் அவதானம் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் பங்காளியான நாம் இனியும் இவ்விடயத்தில் பொறுமையாக இருக்க முடியாது. சமூகத்தை துண்டாடும் இந்தப் போதையை நாட்டிலிருந்து அழித்தொழிக்க வேண்டும். சம்பிரதாய,பாரம்பரிய சட்டதிட்டங்கள் அணுகுமுறைகள் இதனைக் கட்டுப் படுத்தப் போதுமானவையாக இல்லை என்பதை நாம் உணர்கிறோம். பொலிஸாரால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்தவும் முடியாது.
எனவே இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து இந்தப் போதையை விரட்டியடிக்கத் துணிகரமான நடவடிக்கைகளுக்குள் நாமும் நுழைய வேண்டும். எனவே இப்பணிக்காக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் பயன்படுத்த தீர்மானித்துள்ளேன்.
இன்று உறவுகள், சமூகங்கள் பிரிந்து வாழ்வதற்கும் சமூக சீர்குலைவுக்கும் இந்தப் போதை பிரதான பங்காற்றுகிறது. போதை வியாபாரிகளின் பிரதான இலக்காக இன்று பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் காணப்படுகின்றனர். குறிப்பாக தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மீதே போதை வியாபாரிகளின் அதிக கவனம் திரும்பியுள்ளது. இவர்கள் மூலம் போதை வியாபாரத்தை விருத்தி செய்யும் தந்திரோபாயத்தையே இவர்கள் கையாளுகின்றனர்.
எனவே பெற்றோர் இவ்விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இவ்விடயத்தில் எமக்கு கடமையோடு மட்டும் ஒதுங்கி விட முடியாது. போதை இன்று முழு நாட்டையும் ஆட்டிப் படைக்கிறது. போதையை அடியோடு ஒழிப்பதில் எமக்குப் பாரிய பொறுப்பும் உள்ளது என்பதை உணர வேண்டும். எனவே எதிர் கால சந்ததியை படுகுழியில் தள்ளும் இந்தப் போதையை ஒழிக்க எந்த அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித் தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM