(லியோ நிரோஷ தர்ஷன்)
போரின் போது காணாமற்போனவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற நம்பிக்கை வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ளது. ஆகவே மரண சான்றிதழ்களுக்கு பதிலாக காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்தார்.
இதுவரையில் 65 ஆயிரம் முறைப்பாடுகள் காணாமற்போனவர்கள் தொடர்பில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இவர்கள் அனைவருக்குமான காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்குவதற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் விஷேட சட்டம் ஒன்றை நிறைவேற்றி அதனூடாக காணி பிரச்சினை மற்றும் அரசினால் வழங்கப்பட கூடிய சலுகைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு உதவிகளை செய்வதே எமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM