உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் விசா­ரணை தொடர்பில் அர­சாங்கம் பரா­முகம் - ஐ.தே.க.குற்றச்சாட்டு

16 Jan, 2020 | 02:08 PM
image

(செ.தேன்­மொழி)

உயிர்த்த ஞாயி­று ­தின தாக்­கு­தல்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் குறித்து பரா­மு­கத்­தோடு இருப்­ப­தாகத் தெரி­வித்த ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார, அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்­துள்ள நிலையில் எந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றி­யுள்­ளது என்றும் கேள்வி எழுப்­பினார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலே இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் வெற்­றிக்கு உயிர்த்த ஞாயி­று ­தினத் தாக்­கு­தல்கள் பெரிதும் சாத­க ­மா­கி­யி­ருந்­தன. தேர்தல் பிர­சாரங்­களின் போது தாக்­கு­தலை பெரிதும் சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டி ­ருந்­தனர். இதன் போது தாக்­கு­த­லுடன் இவர்­க­ளுக்கும் தொடர்பு உள்­ளதா என்­பது குறித்தும் பலர் சந்­தேகம் எழுப்­பி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தாம் ஆட்­சிக்கு வந்து இரு மாதங்­க­ளுக்குள் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக பல செயற்றிட்­டங்­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்­ட­கை­யு­டனும் இவர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இவர்கள் ஆட்­சிக்கு வந்து இரு மாத­ கா­ல­மா­கி­யுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்-? அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்கு ஒப்­ப­டைப்­ப­தற்­காக கடந்த அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்-துக்கு பெரிதும் எதிர்ப்பு தெரி­வித்து வந்­தனர்.

ஆனால் ஷங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு அருகில் இருந்த நிலத்தை  இவ்­வாறு ஒப்­ப­டைக்கத் தீர்­மா­னித்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்­கத்தின் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­தையும் அவ­தா­னிக்­க­க் கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

முல்­லைத்­தீவு - குருக்­கந்த பகு­தியில் அமைந்­துள்ள ஆலயம் தொடர்பில் கடந்த தினங்­களில் பெரிதும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வந்த அர­சாங்கம் இன்­றைய தினம் (நேற்று) அங்கு பொங்கல் விழாவை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இதுவே எமது அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது இடம்­பெற்­றி­ருந்தால் எங்­களை இனவாதி­க­ளா­கவும், பௌத்த மதத்துக்கு எதி­ரி­க­ளா­கவும் சித்­திரித்­தி­ருப்­பார்கள். காட்டு யானையால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் யானை வேலி அமைத்­து­த் த­ரு­மாறு கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அர­சாங்கம் அவர்­க­ளுக்கு துப்­பாக்­கி­களைப் பெற்றுக் கொடுக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. இது தான் இந்த அர­சாங்­கத்தின் தீர்வு காணும் முறை­யாகும். யானையைத் தடுக்க வேலி அமைத்துக் கொடுக்­காமல் துப்­பாக்கி பெற்றுக் கொடுக்க தீர்­மா­னித்­துள்­ளனர். அமைச்சர் எஸ்.எம். சந்­தி­ர­சே­னவே இவ்­வாறு தீர்­மானம் எடுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இவர்தான் மணல் மற்றும் மண்ணை ஏற்றிச் செல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் இரத்து செய்­தவர்.

இவரின் இந்தச் செயலால் சூழல் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன்  கிரா­மப் ­ப­கு­தி­களுக்கு கன­ரக வாக­னங்­களைக் கொண்டு சென்று மணல் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்­றன. இதன்­ கா­ர­ண­மாக புதிதாக அமைக்கப்பட்டிருந்த கிராமப்புற  பாதைகள்  பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோத்தாபயவின் வெற்றிக்கு அவரிடம் பெரிதும் இணைந்திருந்த ஒரு சிலருக்கு சாதகமான விடயங்கள் கிடைத்திருந்தாலும், மத்திய தர வகுப்பினருக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்த்து கவலையடைந்தே உள்ளனர் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17