நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா வில் பதக்கங்கள் வென்ற வீர, வீராங்க னைகளையும் பயிற்சியாளர்களையும் கெளரவித்து பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்குமாக விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் மொத்தமாக 85 மில்லியன் ரூபா பணப் பரிசு வழங்கப்பட்டது.
கல்வி, இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, அமைச்சரும் கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க, விளையாட்டுத் துறை அமைச்சு அதிகாரிகள் ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பணப் பரிசில்களை வழங்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM