வவுனியா மூன்றுமுறிப்பு குணானந்த ஆரம்ப பிரிவு வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டுக்கு ஆசிரியர் இல்லாமையினை கண்டித்துப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் 5 ஆம் ஆண்டுக்குக் கற்பித்து வந்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆண்டில் 5 ஆம் ஆண்டுக்கு நுழைந்த மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துப் பெற்றோர் இன்று பாடசாலைக்கு முன்பாக தமது பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பது அவர்களது ஒரே கோரிக்கையாக இருந்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமனையின் சிங்கள பிரிவுக்கான கோட்டக்கல்வி அதிகாரி வீரசிங்க அங்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நகரசபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் அங்குப் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது கோட்டக்கல்வி அதிகாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முரண்பட்டுக்கொண்ட நிலையில் வேறு பாடசாலையிலிருந்து 5 ஆம் ஆண்டுக்கு ஆசிரியர் ஒருவரை உடன் நியமிப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM