(இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன் தோட்ட கம்பனிகளுக்கும் நெருக்கடி ஏற்படாத வகையில் நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஸ் பதிரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த குறைந்த சம்பளம் 1000 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மலையக தொழிலாளர்கள் காலம்காலமாக நியாயமாக சம்பள கோரிக்கையினை முன்வைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
கடந்த அரசாங்கத்தில் இப்போராட்டங்கள் முழுமையாக அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் நிலையற்ற தன்மையினால் தோட்ட கம்பனிகள் 1000 சம்பளத்தை வழங்க முடியாது என்ற உறுதிப்பாட்டில் இருந்தார்கள்.
அபிவிருத்தி ரீதியில் பின்னடைந்துள்ள மலையக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் . சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மார்ச் மாதம் 01ம் திகதியில் இருந்து மலையக மக்களின் நாட்சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
தோட்ட கம்பனிகளின் உற்பத்திகளுடன் தொடர்புடைய வரிகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணமும் வழங்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு , உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப் பெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM