மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணைச் செயலர் அழுத்தம் கொடுக்கவில்லை - அரசாங்கம் 

Published By: Priyatharshan

15 Jan, 2020 | 01:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவின்  மிலேனியம் சலன்ச் கோர்பரேசன்  நிறுவனத்துடனான (எம்.சி. சி) ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணைச்செயலர்  அலைஸ் வெல்ஸ் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. 

இரு நாட்டு மக்களின் அபிப்ராயங்களுக்கு முரணாக எவ்வித ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள முடியாது என  துணைச்செயலர் குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது என அமைச்சரவை பேச்சாளர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த  திங்கட்கிழமை  இலங்கைக்கு  விஜயம் மேற்கொண்ட  தெற்கு மற்றும் மத்திய  ஆசிய  விவகாரங்களுக்கான  அமெரிக்க  இராஜாங்க துணைச்செயலர்  அலைஸ் வெலஸ்  எ. ம். சி. ஒப்பந்தம் குறித்து  அரசாங்கத்திற்கு அழுத்தம்  பிரயோகித்ததாகவும், அரசாங்கம் அதற்கு  எவ்வித   பதிலும் குறிப்பிடவில்லை என்றும் பொய்யான  செய்திகள்    சமூக வலைத்தளங்களில் வெளியானது . இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்காவின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு  விஜயம் மேற்கொண்டால் அதனை மாறுப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது  முற்றிலும் தவறானதாகும்.  தற்போது விஜயம்  மேற்கொண்ட  அமெரிக்க துணைச்செயலர்  எம். சி. சி  ஒப்பந்தம் குறித்து  எவ்விதமான அழுத்தங்களையும்  அரசாங்கத்திற்கு பிரயோகிக்கவில்லை. இவ்வொப்பந்தம் குறித்து    முறையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற து  என்பதனை அவர்  நன்கு அறிந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13