பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் ஜனாதிபதி நெருக்கடிகளை சந்திப்பார் -  மைத்திரி

Published By: Priyatharshan

15 Jan, 2020 | 05:45 AM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. ஜனாதிபதிக்கு பெருமளவில் அதிகாரங்கள் காணப்பட்டாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையேல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தற்போதைய பாராளுமன்றத்தை மாற்றி புதியதொரு பாராளுமன்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

காரணம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். 

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரங்கள் இருந்தாலும் அவரால் முழுமையான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. 

ஜனாதிபதிக்கு வேண்டியளவு அதிகாரங்கள் காணப்படுகின்றன. எனவே அவர் நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர். அது தவறாகும். அவ்வாறு எண்ணுபவர்களின் தெளிவின்மையே அவ்வாறு சிந்திக்க வைக்கிறது. 

ஜனாதிபதி ஒருவருக்கு திட்டமிட்ட படி வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவருடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்திற்கு அத்தியாவசியமாகிறது. அவ்வாறில்லை என்றால் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. 

எனவே நாம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கைகை மாற்றுவதற்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். அதற்கமைய ஒழுக்கமுடைய நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10