(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. ஜனாதிபதிக்கு பெருமளவில் அதிகாரங்கள் காணப்பட்டாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையேல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தற்போதைய பாராளுமன்றத்தை மாற்றி புதியதொரு பாராளுமன்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
காரணம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரங்கள் இருந்தாலும் அவரால் முழுமையான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது.
ஜனாதிபதிக்கு வேண்டியளவு அதிகாரங்கள் காணப்படுகின்றன. எனவே அவர் நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர். அது தவறாகும். அவ்வாறு எண்ணுபவர்களின் தெளிவின்மையே அவ்வாறு சிந்திக்க வைக்கிறது.
ஜனாதிபதி ஒருவருக்கு திட்டமிட்ட படி வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவருடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்திற்கு அத்தியாவசியமாகிறது. அவ்வாறில்லை என்றால் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
எனவே நாம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கைகை மாற்றுவதற்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். அதற்கமைய ஒழுக்கமுடைய நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM