தேசிய தைப்­பொங்கல் நிகழ்வை இரத்து செய்­தமை கவ­லைக்­கு­ரி­யது: தமிழ்-முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வத்­துக்கு அர­சாங்கம் மதிப்­ப­ளிக்க வேண்டும்

Published By: J.G.Stephan

14 Jan, 2020 | 12:33 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

பல்­லின மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின் மத கலா­சா­ரங்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்­றிய   விதத்தில் முன்­னு­ரிமை  கொடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல்   நிகழ்­வை அர­சாங்கம்  உரிய   கார­ணங்கள் இன்றி  இரத்து செய்­தது  கவ­லைக்­கு­ரி­யது. பிற மதங்­களின் தனித்­து­வத்துக்கும் அர­சாங்கம் முன்­னு­ரிமை  கொடுத்தால் மாத்­தி­ரமே தேசிய  நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  காவிந்த ஜய­வர்­தன  தெரி­வித்தார்.

இது­ கு­றித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மூன்று இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து கடந்த  ஐந்து வருட கால­மாக  கொண்­டா­டிய தேசிய தைப்­பொங்கல்  தின நிகழ்­வுகள் இம்­முறை  இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான   செயற்­பா­டா­கவே கருத முடியும்.    கொண்­டாட்­டங்­களின் ஊடா­கவே தேசிய நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும்.  ஓர் இனத்தின்   மத கலா­சா­ரங்­களை பிறி­தொரு இனத்­தவர் புரிந்துகொள்­வது அவ­சி­ய­மா கும்.

கடந்த  ஐந்து வருட  கால­மாக   25 மாவட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைத்த வகையில்  நத்தார்,  தைப்­பொங்கல்,  ரமழான் ஆகிய  பண்­டி­கைகள் தேசிய விழா­வாக  இளைஞர், யுவ­தி­க­ளினால்  வெகு­வி­மர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டன. நாளை  கொண்­டா­ட­வுள்ள  தைப்­பொங்கல் தின  நிகழ்­வுகள்  நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில்    எவ்­வித உரிய  கார­ணங்­க­ளு­மின்­றிய விதத்தில் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  கவ­லைக்­கு­ரி­யது. ஓர்  இனத்­துக்கும்,  கலா­சா­ரங்­க­ளுக்கும் மாத்­திரம்  முன்­னு­ரிமை  அரச ரீதியில் வழங்­கப்­படும் பட்­சத்தில்  அங்கு முரண்­பா­டு­களே தோற்றம் பெறும்.   இதற்கு  வர­லாற்றுச்  சம்­ப­வங்கள்  சான்று பகர்­கின்­றன.  இதனை  அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும்.  பல்­லின  சமூகம் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின்    தனித்­து­வத்­துக்கும் முன்­னு­ரிமை கொடுத்தால் மாத்­தி­ரமே அங்கு  ஜன­நா­யகம்    நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­படும்.  இன்று   இந்­நிலை கேள்­விக்கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து இன மக்­களின் தனித்­து­வங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டது.  2016ஆம் ஆண்டு   சுதந்­திர தின நிகழ்வில்   தேசிய  கீதம் தமிழ் மொழியில்  பாடப்­பட்­டதை இன்று    ஆளும்  தரப்­பினர்  அர­சி­ய­ல­மைப்­பிற்கு  முர­ணான செயல் என்று குறிப்­பி­டு­கின்­றார்கள்.     ஒரு மொழியை  அர­சியல் தேவை­க­ளுக்­காக  புறக்­க­ணிப்­பதால் எவ்­வித  நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான விட­யங்­களும் தோற்­றம்­ பெ­றாது. அவை  எதிர்காலத்திலே  மாறுபட்ட  தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே அரசாங்கம் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே  செயற்பட வேண்டும்.  தமிழ், - முஸ்லிம்  மக்களின்  தனித்துவங்களுக்கு மதிப்பளித்து  தேசிய  நல்லிணக்கத்தைக்   கட்டியெழுப்ப வேண்டியது  அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31