கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.
ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM