(எம்.எப்.எம்.பஸீர்)
கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க பாதுகாப்புத் தரப்புக்கு அழுத்தம் பிரயோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2,3,4,5 ஆம் அத்தியாயங்களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்ப்ட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1), 3 (2) ஆம் அத்தியாயங்களின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 486 ஆம் அத்தியாயத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கருதியே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக மேல் மாகாண த்ற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டு அவரின் கீழ் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பனிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அந்த விசாரணைப் பிரிவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்ப்ட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய அமைச்சரான ரிஷாத் பதியுதீன் அப்போதைய இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவை தொலைபேசியில் அழைத்தமை சட்டத்தின் ஆட்சி மீதான பாரிய தாக்குதல் என முறைப்பாட்டாளர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும், இதே போன்று மேலும் பல பயங்கரவாத சந்தேக நபர்களை விடுவிக்க ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்தாரா என்பது குறித்தும் தேட வேண்டும் என அவர் கோரியுள்ளதாகவும் பொலிஸார் மன்றுக்கு நேற்று விஷேட அறிக்கை ஊடாக தெரிவித்தனர்.
இந் நிலையில் ரிஷாத் பதியுதீன் சந்தேக நபரை விடுவிக்க அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் அப்போதைய இராணுவ தளபதி செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், அவற்றை ஒளிபரப்பிய 5 ஊடக நிறுவனங்களில் உள்ள செம்மைப்படுத்தப்படாத அந்த செய்தியாளர் சந்திப்பின் காணொளிகளை விசாரணைகளுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என இதன்போது விசாரணையாளர்களால் நீதிவானிடம் கோரப்பட்டது.
அந்த கோரிக்கைக்கு அனுமதியளித்த பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM