பிள்ளையை பாடசாலைக்கு விட்டு வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மனைவி

Published By: J.G.Stephan

13 Jan, 2020 | 04:51 PM
image

(ஆர்.விதுஷா)

பதுளை  - அசேலபுர  பகுதியில்  பெண்ணொருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை  6.30  மணியளவில் இடம்பெற்றதாக  பதுளை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி   தெரிவித்தார்.  

வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் பதுளை  வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் பிள்ளையை  பாடசாலைக்கு அழைத்து  சென்றிருந்த  தருணத்தில் அங்கு வந்த  நபரொருவரே குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது  தெரிய  வந்துள்ளது.

பாடசாலை  சென்று காலை 8 மணியளவில் வீடு  திரும்பிய போது  தமது மனைவி  கை, கால்கள்  கட்டப்பட்டு,  கழுத்தில்  வெட்டுக்காயங்களுடன்  இருப்பதை பார்த்த  கணவர் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  

வீட்டு கட்டுமான  பணிக்காக  வருகை தந்திருந்த  பதுளை , பதுலுசிறிகமை பகுதியை  சேர்ந்த  நபரொருவரே  இந்த செயலை புரிந்துள்ளமை விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.  

சம்பவத்துடன்  தொடர்புடைய  சந்தேகநபர்  இதுவரையில்  கைதுசெய்யப்படாத நிலையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன்,  சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பதுளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38