மூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

Published By: Digital Desk 3

13 Jan, 2020 | 04:21 PM
image

மூடப்படும் நிலையில் இருந்த வவுனியா வெளிக்குளம் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள தரம் 2 பாடசாலையான வெளிக்குளம் மகாவித்தியாலயம் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவாக காணப்பட்ட நிலையில் மூடப்படும் நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலைக்கு கடந்த ஆறு மாதங்களாக அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வருடம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய பாஸ்கரமூர்த்தி நேசராஜா வடமாகாண கல்விதிணைக்களத்தால் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 2 ஆம் திகதியில் இருந்து உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.   

க.பொ.த.சாதாரண தரம் வரை உள்ள குறித்த பாடசாலையில் கடந்த வருடம் 35 மாணவர்கள் மாத்திரமே கல்விகற்று வந்திருந்த நிலையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் 15 மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய பாடசாலைகளை நாடாமல் வெளிக்குளம் பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைத்துக்கொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51