(நா.தனுஜா)
இலங்கையில் 1 - 14 வயதுடைய சிறுவர்களில் பெருமளவானோர் நீர் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்குதல் போன்றவற்றினாலேயே உயிரிழக்கின்றனர்.
நீரில் மூழ்குவதனால் வருடாந்தம் 91 சிறுவர்கள் மரணமடைவதுடன், அனைத்து வயதுப்பிரிவினரிலும் சராசரியாக 755 பேர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் முறையாகப் போதிக்கப்படாததும் பாதுகாப்பற்றதுமான கடல், கால்வாய், கிணறு ஆகியவற்றின் பயன்பாடு காரணமாக ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் இலங்கையில் உயிர்காக்கும் செயற்பாடு பற்றிய விபரங்களை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியாவின் உயிர் பாதுகாப்பு விக்டோரியா அமைப்புடன் இணைந்து இலங்கை உயிர் பாதுகாப்பு குழுமம் இலங்கையில் நீர் அனர்த்தங்களைத் தடுத்துக் கொள்வதற்கான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி நீர்நிலைகள், நீரேந்தும் பிரதேசங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான போதிய தெளிவுபடுத்தல்களைப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் விதமான வழிகாட்டி கையேடு ஒன்றையும் தயாரித்திருப்பதுடன், அது விரைவில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நீர்நிலைகளுடன் தொடர்புடைய வகையில் ஏற்படத்தக்க விபத்துக்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் இணைந்து இலங்கை உயிர் பாதுகாப்பு குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் பதில் உதவித் தூதுவர் தோமஸ் டேவிஸ் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM