(எம்.மனோசித்ரா)
ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அம்பலாந்தோட்ட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் யுத்தமாக உருவாகினால் முழு உலகுக்குமே பாரிய பாதகமான விளைவை உண்டாக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியாதவையாக இருக்கும்.
முழு உலகமும் அபிவிருத்தி அடையும் போது போர் தொழில்நுட்பமும் பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பலம் வாய்ந்த நாடுகள் ஏனைய நாடுகளைவிட போர் தொழில்நுட்பத்தை விருத்தியடையச் செய்வதற்கே பாடுபட்டிருக்கின்றன. அதன் பிரதிபலம் எந்தளவு பாரதூரமானது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது.
இந்த மோதல்களால் எமது நாட்டுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் போது நாம் எவ்வாறு அவற்றுக்கு முகங்கொடுப்பது? அந்த நாடுகளுக்கிடையிலான மோதல்கள் நிச்சயம் இலங்கையிலும் தாக்கம் செலுத்தும். எமக்கு மாத்திரமல்ல. ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தும். எவ்வாறிருப்பினும் நாம் அவற்றுக்கு முகம் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம்.
இந்த மோதல்களால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்க நாம் தயாராக இல்லை. அதே போன்று இதனை காரணம் காட்டி எரிபொருள் விலை அதிகரிக்கப்படவும் மாட்டாது. அவ்வாறான எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இது வரையில் எடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM