பெரும்­பான்மை அர­சாங்­கத்தை உரு­வாக்க தமிழ், முஸ்­லிம்­களின் ஆத­ரவு கிடைக்கும் - ரோஹித அபே­கு­ண­வர்­தன

13 Jan, 2020 | 02:28 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுடன்  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­ட­னான அர­சாங்­கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும். நல்­லாட்­சியில் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுக்­காத  வடக்கு மற்றும் மலை­யக அர­சியல் பிர­தி­நி­தி­களின்  பாரா­ளு­மன்ற பிர­வேசம் இம்­முறை  சந்­தே­கத்­துக்கு­ரி­யது என  சக்­தி­வலு இரா­ஜாங்க அமைச்சர்   ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

இது தொடர்பில்  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

களுத்­துறை மாவட்­டத்தில் அதி­க­மான அளவு தமிழ்,- முஸ்லிம் மக்கள் வாழ்­கின்­றார்கள்.  ஜனா­தி­பதி தேர்­தலில்  அம்­மக்கள் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு     ஆத­ரவு  வழங்­கி­யுள்­ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மக்­களின் ஆத­ரவு எமக்கு  கிடைக்கப் பெறா­மைக்கு பல்­வேறு   அர­சியல்  மற்றும்  பாரம்­ப­ரிய  கார­ணி­களும் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.

தேசிய  நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்பப்­பட வேண்­டு­மாயின்  அனைத்து மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்   பாரா­ளு­மன்றம் தோற்றம் பெற வேண்டும்.  தற்­போ­தைய  தமிழ் – முஸ்லிம் அர­சியல் வாதிகள்   அவர்­களை தெரிவு செய்த மக்­களின் தேவை­களை  உணர்ந்து செயற்­ப­ட­வில்லை. இதில் குறிப்­பாக வடக்கு மற்றும் மலை­யக தமிழ் அர­சி­யல்­வா­தி­களை குறிப்­பிட வேண்டும். மக்­களின்  பிர­தி­நி­தி­யாக    செயற்­பட முடி­யா­தவர் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும்.

அனைத்து இன மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்­ற­த்தை மூன்றில் இரண்டு பெரும்­பான்மை  ஆத­ர­வுடன்  எம்மால்  ஸ்தாபிக்க முடியும்.  இம்­முறை பொது­ஜன பெர­மு­னவின்  சார்பில்  பொதுத்­தேர்­தலில் மூன்று இனத்­த­வர்­க­ளையும் போட்­டி­யிட செய்ய வேண்டும் என்ற யோசனை  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில்  உரிய தீர்­மானம் வெகு­வி­ரைவில்  எடுக்­கப்­படும்.

நிலை­யான   அர­சாங்கம் தோற்றம் பெற வேண்­டு­மாயின்  மக்­களின் விமர்­ச­னங்­க­ளுக்குள்­ளா­ன­வர்­களை  மக்கள் இம்முறை பொதுத்தேர்தலின்  ஊடாக புறக்கணிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தினை போன்று  நிர்வாகத்துறைக்கும் சட்டத்து றைக்கும் இடையில் முரண்பாடான அர சாங்கம் தோற்றம் பெற்றால்    எவ்வித பய னும் ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50