(இராஜதுரை ஹஷான்)
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும். நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வடக்கு மற்றும் மலையக அரசியல் பிரதிநிதிகளின் பாராளுமன்ற பிரவேசம் இம்முறை சந்தேகத்துக்குரியது என சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
களுத்துறை மாவட்டத்தில் அதிகமான அளவு தமிழ்,- முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் அம்மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப் பெறாமைக்கு பல்வேறு அரசியல் மற்றும் பாரம்பரிய காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.
தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டும். தற்போதைய தமிழ் – முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களை தெரிவு செய்த மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படவில்லை. இதில் குறிப்பாக வடக்கு மற்றும் மலையக தமிழ் அரசியல்வாதிகளை குறிப்பிட வேண்டும். மக்களின் பிரதிநிதியாக செயற்பட முடியாதவர் புறக்கணிக்கப்பட வேண்டும்.
அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் எம்மால் ஸ்தாபிக்க முடியும். இம்முறை பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத்தேர்தலில் மூன்று இனத்தவர்களையும் போட்டியிட செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும்.
நிலையான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் மக்களின் விமர்சனங்களுக்குள்ளானவர்களை மக்கள் இம்முறை பொதுத்தேர்தலின் ஊடாக புறக்கணிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தினை போன்று நிர்வாகத்துறைக்கும் சட்டத்து றைக்கும் இடையில் முரண்பாடான அர சாங்கம் தோற்றம் பெற்றால் எவ்வித பய னும் ஏற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM