திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தில் சந்தைபெறுமதியை விட குறைந்த விலைக்கு டொலர் நாணயத்தாள்களை மாற்றித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பணமும், ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான ஆயிரம் அமெரிக்கா டொலர்களும் மீட்கப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பிரதேசத்தைச்சேர்ந்த நால்வரும்,பொலநறுவை மாவட்டம் மெதலகிரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் மற்றும் வான்அலை பிரதேசங்களைச்சேர்ந்த தலா ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இம்மோசடி வேலை நிமித்தம் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோசடிக் கும்பல் கந்தளாய் பிரதேச நபர் ஒருவரை தொடர்புகொண்டு தம்மிடம் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் டொலர்களை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்க முடியும் என பேரம்பேசி கந்தளாய் நபரை வரவழைத்து அவரிடமிருந்து பத்து லட்சம் ரூபாயை அபகரித்துக்கொண்டு ஓடியநிலையில் பணம் பறிகொடுத்த நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை தலைமையக பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு குறித்த நபர்களை கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM