பென்சி கடை ஒன்றுக்கு தீ வைத்த விசமி - பருத்தித்துறையில் சம்பவம்

Published By: Digital Desk 4

12 Jan, 2020 | 12:20 PM
image

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள பென்சி கடை ஒன்று விசமி  ஒருவரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ள நிலையில் கடையிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பென்சி பொருட்கள் மற்றும் பாதணிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த நாசகாரச் செயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று சிசிரிவி காணொலியை அடிப்படையாக வைத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள சஜித் பென்சி என்ட் சூ மார்ட் என்ற கடையே இவ்வாறு பெற்றோல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

கடையின் கதவினை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீவைத்துவிட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கான்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15