பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள பென்சி கடை ஒன்று விசமி ஒருவரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ள நிலையில் கடையிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பென்சி பொருட்கள் மற்றும் பாதணிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த நாசகாரச் செயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று சிசிரிவி காணொலியை அடிப்படையாக வைத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.
பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள சஜித் பென்சி என்ட் சூ மார்ட் என்ற கடையே இவ்வாறு பெற்றோல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
கடையின் கதவினை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீவைத்துவிட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கான்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM