பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் என ஏமாற்றி 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வின்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஜெம்மா வாட்ஸ் என்ற பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இணையத்தளத்தில் தன்னை 16 வயது சிறுவன் என அறிமுகப்படுத்தி கொண்டதுடன் தனது பெயரை ஜேக்வாடன் என மாற்றியமைத்து, அவள் சிறுவன் போன்று உடை அணிந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளாள்.
அதன் மூலம் பல சிறுமிகளுடன் தொடர்பு கொண்ட அவள் அவர்களை 'பேபி' உள்ளிட்ட செல்லப் பெயர்களில் அழைத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.
பின்னர் அவர்களை நேரில் சந்தித்து ஆசை வார்த்தைகளைப் பேசி அவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி சிறுமிகளின் வாழ்க்கையையும் சீரழித்துள்ளாள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து ஜெம்மா வாட்ஸ்சை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவள் மீது வின்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவளை குற்றவாளி என அறிவித்து 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM