கடந்த சில வாரங்களாக சீனாவை தாக்கிய “ சார்ஸ் ” நோய் குடும்பத்தை சேர்ந்த மர்ம வைரஸால் ஏற்பட்ட நிமோனியா சுவாச நோயால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த “ சார்ஸ் ” வைரஸால் ஒரு தசாப்பதத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான உயிரிழந்துள்ளார்கள்.
மத்திய சீன நகரமான வுஹானில் நிமோனியா நோய் அறிகுறிகளுடன் நாற்பத்தொரு பேர் இதுவரை இனங்கானப்பட்டுள்ளனர்,
இந்நிலையில், 61 வயதான நபர் ஒருவரே வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக வுஹானின் சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த மர்ம வைரஸ் சார்ஸ் அல்லது திடீர் கடுமையான சுவாச நோய் அறிகுறி காரணமாக எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இது 2002-2003 ஆம் ஆண்டில் சீனாவில் 349 பேரையும், ஹொங்கொங்கில் 299 பேரையும் கொன்றதுடன், சுற்றுலாவில் தொற்றுநோய்களின் பேரழிவு தாக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சீன விஞ்ஞானிகள் கடந்த வாரம் குறித்த நோய்க்கிருமி மர்ம கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தது என்று நம்புகிறார்கள், இது பொதுவாக சளி முதல் சார்ஸ் போன்ற தீவிர நோய்கள் வரை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பமாகும் என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM