(ஆர்.விதுஷா)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில், மாணவர் உதவித்தொகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய நிதியினை நாளை மறுதினம் திங்கட்கிழமை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக தெரவித்திருக்கும் ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருங்கிணைப்பாளர் ஜின்ன ரத்தன தேரர் தாம் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்கே தீர்வு கிடைத்துள்ளதாகவும் விசனம் தெரிவித்தார்.
மஹாபொல மாணவர் உதவி தொகையை அதிகரிக்க கோரி கடந்த வியாழக்கிழமை ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஜனாதிபதி செயலகத்தற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அரசாங்கம் அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் அவர்களுடைய அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் வினவிய போதே தேரர் இதனை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது ,
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையை திங்களன்று பெற்றுத்தருவதாக அரசாங்க தரப்பினர் வாக்குறுதியளித்துள்ளனர். விரிவுரைகளுக்காக 80 வீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல நிதியை வழங்குதல், மாணவர் தொகை மற்றும் மஹா பொல புலமை பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்பிரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைகள் , மாணவர் உதவி தொகையை வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் பெற்றோரின் வருமானத்தை வருடாந்தம் 7 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளையே முன்வைத்திருந்தோம்.
இந்நிலையில் , இவ்வரசாங்கத்தின் ஊடாக எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு கிடைக்கப்பெறாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராவோம் என்றார்.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து மஹா பொல உதவித்தொகையை அதிகரிக்குமாறு அப்போதைய அரசாங்கத்திடம் ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கு தீர்வாக கடந்த 2015 இல் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மஹா பொல உதவி தொகையை 5000 ரூபாவாக அதிகரித்தது.
இருப்பினும் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் , மஹாபொல கட்டணத்தை 10, ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்தியருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM