விமானம் சுட்டு விழுத்தப்படுவதற்கு காரணமாணவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் விமான விபத்திற்கு தனது தரப்பில் இடம்பெற்ற மனித தவறே காரணம் என ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்தே உக்ரைன் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இன்றைய காலை சிறப்பானதல்ல ஆனால் அது உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆணைக்குழு தனது விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னரே ஈரான் உக்ரைன் விமானத்தை சுட்டுவீழ்த்தியதை ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ஈரான் குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொள்ளவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் ஈரான் முழுமையான வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஈரான் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்கவேண்டும், நஸ்ட ஈடு வழங்கவேண்டும் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செயற்கையாக உருவாக்கப்படும் தடைகள் இன்றி விசாரணைகள் இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு ஈரான் அனுமதி வழங்கவேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM