தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. அதுபோல தை பிறப்புடன் பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் நல்ல செய்தி கிட்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;-
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சொன்னதைச் செய்பவர். எனவே அவரிடம் எமது சமூகம் தொடர்பில் சில கோரிக்கைளை முன்வைத்துள்ளோம். அதில் முக்கியமாக பெருந்தோட்டப் பகுதியில் மது பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் சாராயத் தவறணைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், தோட்டப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்த்தல், மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் வைத்திய சேவையை விருத்தி செய்யும் வகையில் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர கிராமத்துக்கு ஒரு வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் கிராமங்கள் தோறும் வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனை தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
எமக்கு அடுத்த பொதுத் தேர்தலில் சின் னம் ஒரு பிரச்சினையல்ல. சேவல் சின்னம், தாமரை மொட்டுச் சின்னம், நாற்காலி சின்னம் என எதுவானாலும் நாம் ஜனாதிபதியுடன் கூடவே இருப்போம். எமது ஆதரவு என்றும் அவருக்கே வழங்கப்படும்.
பெருந்தோட்டக் காணிகளை ஏ.பீ.சீ. என்று தரப்படுத்தி சீ தரத்தை தோட்டத் தொழிலாளருக்கு வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. சீ தரம் என்பது பயன்படுத்த முடியாத கற்பாறைகள் கொண்ட பகுதியாகும். அதனை மாற்றும்படியும் அரசை வேண்டியுள்ளோம்.
சிறுபான்மையினருக்கு பாதகம் ஏற்படும் எந்த ஒரு விடயத்தையும் நாம் எதிர்ப்போம். விஜேதாச ராஜபக் ஷ கொண்டு வந்த சட்மூலமானாலும் சரி வேறு சட்டங்களானாலும் சரி அவை சிறுபான்மையினருக்கு பாதகமாக இருக்குமாயின் நாம் எதிர்ப்புத் தெரிவிக்க பின்னிற்க மாட்டோம். ஆனால் ஜனாதிபதி முறையே சிறுபான்மைக்கு சாதகமாக உள்ளது. எனவே ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அதிகரிப்பது நல்லது. இதில் 19, 20 எமக்கு பிரச்சினை அல்ல. எமது மக்களுக்கு எது நன்மை தரும் என்பதே நோக்கப்படும். இன்று சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகளே தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி இழந்து வாழக் காரணமாகும். ஆகவே இனிவரும் காலங்களிலாவது சுயநல போக்குடைய அரசியல் வாதிகள் தங்களது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் விடயத்தில் அன்றும் இன்றும் இ.தொ.கா. தான் முக்கிய பங்காற்றுகிறது. இ.தொ.கா.வின் உதவி இன்றி ஆட்சி அமைக்க முடியாது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள 11 பிரதேச சபைகளில் 10 சபைகளின் அதிகாரம் எமது கையில் உள்ளது. இ.தொ.கா. வானது ஒரு தேர்தலில் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சக்தி உடையது. ஆனால் எம்மை எதிர்ப்பவர்கள் ஒரு சிறிய பரப்பில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்சொன்ன சபைகளில் ஒன்றையேனும் கைப்பற்றவில்லை. நாடளாவிய ரீதியில் போட்டியிடும் திறன் அவர்களுக்கு இல்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி எம்மிடம்தான் உள்ளதென்பதை எதிர்த் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM