முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவு பகுதியில் கடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11.01.2020) காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், முல்லைத்தீவிலிருந்து மல்லாவி பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்த கடற்படையினரின் வாகனத்துடன் கணவன் மனைவி ஆகிய இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வளைவு பகுதியில் மோதியதில் கணவர் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துனுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீவன் (28வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைதீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM