ஓமான் நாட்டு சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (79) , உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஓமான் நாட்டு சுல்தானாக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த சுல்தான் பின் குவாபூஸ் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் ஒரு தனித்துவமான மத்தியஸ்தர், தொலைநோக்கு பார்வை கொண்ட குவாபூஸ், நாடுகளுக்கு இடையே பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தைள் நடத்தி அமைதிக்கு வழி வகுத்தவர்.
கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே இரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் பின் குவாபூஸ் பின்னுக்கு எந்த வித வாரிசும் கிடையாது. இந்த நிலையில், அவரது மறைவால் நாட்டின் மன்னர் பதவி வெற்றிடமாக உள்ளது. அவரது இடத்தில் அடுத்து பதவிக்கு வரப்போவது யார் என்று உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM