இன அழிப்பின் ஓர் அங்கமே உலகத் தமிழராட்சி மாநாட்டின் கொலைச் சம்பவம் - சிவாஜிலிங்கம்

Published By: Digital Desk 3

10 Jan, 2020 | 03:37 PM
image

இன அழிப்பின் ஒரு அங்கமாகத்தான்  உலகத் தமிழராட்சி மாநாட்டின் கொலைச் சம்பவத்தை நாங்கள் பார்க்கின்றோம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

உலகத்தமிழராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 46 ஆவது ஆண்டு நிகழ்வு இன்று முற்ற வெளியிலுள்ள தமிழராட்சி நினைவுத்தூபியில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினப் படுகொலையின் ஒரு அங்கமாகத்தான் உலகத்தமிழராட்சி மாநாட்டின் கொலைச் சம்பவத்தைப் பார்க்கமுடியும் இந்தப் படுகொலைச் சம்பவத்தை நாங்கள் வருடம் தோறும் நாங்கள் நினைவு கூறவேண்டும்.

அமரர் அமிர்தலிங்கம் காலத்தில் இந்தத் தூபிகள் அமைக்கப்பட்டபோது மறுநாள் அதை இடித்தார்கள். அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்தில் நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டன.

இது போல பல தடவைகள் இத்தூபி தேசமாக்கப்பட்ட நிலையில் மீளவும் புனரமைக்கப்பட்டது. தமிழ் மக்களின் இன விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது பல தடவைகளாக தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் தமிழர்கள் விடுதலை அடையும் வரை விழ விழ நாங்கள் மீண்டெழுவோம் எமக்கான விடுதலை கிடைக்கும் வரையும் எங்கள் மீது அனைத்து கொலைகள் கொலைமுயற்சிகள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டிலும் அவற்றை நினைவு கூறவேண்டும்.

எங்களை நாங்களே ஆளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயிரிழந்த அனைவருக்காவும் நாங்கள் நினைவுகூரவேண்டும், எங்கள் விடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரவேண்டும் என்பதே எமது எண்ணம் இதை உலக நாடுகளும் உணரவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17