(செ.தேன்மொழி)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பௌர்ணமி தினமான இன்று மத வழிபாடுகளுடன் எதிர்க்கட்சி அலுவலகத்தின் பணிகளை புத்தாண்டில் ஆரம்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தை அடுத்து எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தை பொறுப்பேற்ற அவர் அதன் ஆரம்பக்கட்ட பணிகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்ததுடன், கங்காரம விகாரதிபதி கிரிந்தே ஹஸ்ரஜித் தேரர் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது சஜித் பிரேமதாச , அவரது பாரியார்ஜலனி பிரேமதாச மற்றும் தாயாரான ஹேமா பிரேமதாச ஆகியோர் கலந்துக் கொண்டிருந்ததுடன். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணாநாயக்க, ஹர்ஷ டி சில்வா , பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா , சுஜீவ சேனசிங்க, கயந்த கருணாதிலக, ஹர்சன ராஜகருணா , தலத்தா அத்துகோரல , விஜேகலா மகேஸ்வரன் , ஹரின் பெர்ணான்டோ, அஜித் பி பெரேரா, முஜிபுர் ரஹூமான் , ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட பலரும் வருகைத்தந்திருந்ததுடன் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு நகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க , திஸ்ஸ அத்தனாயக்க மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
கிரிந்தே ஹஸ்கிரிய தேரரின் தலைமையில் பௌத்த ஆராதனை மற்றும் பௌத்த மத போதனைகளும் இடம்பெற்றன.
இதேவேளை இந்நிகழ்வில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க , பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம் , முன்னாள் பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் சமூகமளித்திருக்காமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM