தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த சுமார் 19 வயதில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 27 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த செ.மகேந்திரன் (வயது- 46) என்ற அரசியல் கைதி அண்மையில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அரசில் கைதிகளை சிறையில் அடைத்து கொலை செய்யாதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், அரசே பயங்கர வாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அரசே மகேந்தினை ஏன் கொன்றாய், அரசே ஜே.வி.பிக்கு ஒரு நீதி தமிழருக்கு வேறு நீதியா அப்பாவித் தமிழர்களை சிறையில் சாகடிக்காதே நீதி வேண்டும் நீதி வேண்டும் மகேந்திரனின் மரணத்திற்கு நீதி வேண்டும். போன்ற கோஷகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM