தமிழ் அரசியல் கைதி உயிரிழந்தமையைக் கண்டித்தும், கைதிகளை விடுவிக்கக் கோரியும் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

10 Jan, 2020 | 03:40 PM
image

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த சுமார் 19 வயதில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 27 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த செ.மகேந்திரன் (வயது- 46) என்ற அரசியல் கைதி அண்மையில் உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அரசில் கைதிகளை சிறையில் அடைத்து கொலை செய்யாதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், அரசே பயங்கர வாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அரசே மகேந்தினை ஏன் கொன்றாய், அரசே ஜே.வி.பிக்கு ஒரு நீதி தமிழருக்கு வேறு நீதியா அப்பாவித் தமிழர்களை சிறையில் சாகடிக்காதே நீதி வேண்டும் நீதி வேண்டும் மகேந்திரனின் மரணத்திற்கு நீதி வேண்டும். போன்ற கோஷகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59