மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க செல்வசுந்தரம் என்ற நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் சுகயீனம் காரணமாக நேற்று மாலை சிகிச்சைக்கென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
சடலம் மீதான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனினும் தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்,மு.இராமசந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM