(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட அவரது குரல் பதிவுக, கணிணிகள் உள்ளிட்டவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நுகேகொட மேலதிக நீதிவான் எச்.யு.கே. பெல்பொல இதற்கான உத்தர்வை இன்று மாலை வழங்கினார்.
சர்ச்சைக்குள்ளகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விஷேட விசாரணைகளை தற்போது பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கும் நிலையில், விசாரணையாளர்களான கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இன்று மாலை மீண்டும் நுகேகொடை மேலதிக நீதவான் பெல்பொலவிற்கு விளக்கமளித்தது.
சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குறித்த குரல் பதிவுகள் பகிரப்படுவதால், அவை பிரதியிடப்பட்ட விதம் இதற்காக பயன்படுத்தப்பட்ட கணிணிகள் மற்றும் வன்பொருட்கள் தொடர்பில் அறிக்கை பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் இதன்போது மன்றில் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட குரல் பதிவுகள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து பகுப்பாய்வு அறிக்கை பெறுவதற்கு மேலதிக நீதவான் அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM