நாட்டின் நீதித்துறைக்கு அரசியல்வாதிகள் பிரயோகித்துள்ள அழுத்தம் பாரதூரமானது  : பிரதமர் 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 09:54 PM
image

பாராளுமன்ற அரசியலில் சேறுப்பூசும் கலாச்சாரத்தை இல்லாதொழித்து அரசியல் மற்றும் மக்களின் அடிப்படை    பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் நிலையான பாராளுமன்றத்தை   மீண்டும் உருவாக்க தயாராக உள்ளோம்.

நீதித்துறையில் அரசியல்வாதிகள் பிரயோகித்துள்ள அழுத்தம்  பாரதூரமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற பத்திரிகையாசிரியர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது  சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அரசியல்வாதிகளின் குரல் பதிவுகளின் ஊடாக  கடந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகளினால் நீதித்துறைக்கு எந்தளவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளன.

தற்போதைய நிலமையின்  அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என  மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். 

நீதிமன்றத்திற்கு தொடுத்துள்ள தாக்கம் பாரதூரமானது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையினை பாதுகாக்கும் பொறுப்பு   எமக்கு காணப்படுகின்றது.

கடந்த  அரசாங்கத்தில் எமது  தரப்பினர் ஒரு  சில  மீது   விடயங்களுக்காகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நிதியமைச்சின்   நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தற்போது விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோடிக்கணக்கில் நிதி செலவு செய்யப்பட்டுள்ளன. ஆனால்  உரிய ஆவணங்கள் காணப்படவில்லை. ஒரு சில பிரிவுகளின் நிதி   முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம், சட்டமாதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகிய மூன்று தரப்பினரையும் உள்ளடக்கிய அழுத்தம் பிரயோகிகப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு கண்டு நீதிமன்றத்தினை  சுயாதீனப்படுத்த வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற தரப்பிலும் துரிதமான  நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1970ம்  ஆண்டு காலப்பகுதியில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் கோட்பாடுகளையும், கௌரவத்தையும் பாதுகாத்தார்கள். ஆனால்  கடந்த கால நிலவரங்களில் இந்த மதிப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் சேறுப்பூசிக் கொள்ளும் நிலமையினை  இல்லாதொழித்து மக்களுக்காக செயற்படும் நிலையான  பாராளுமன்றத்தை தோற்றுவிக்க தயாராக உள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21