பங்களாதேஷில் இந்து மதகுரு ஒருவர் தீவிரவாத சந்தேக நபர்களால் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் பெரும் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஜெனெய்டாஹ் பிராந்தியத்திலுள்ள ஆலயத்துக்கு அருகில் ஆனந்த கோபால் கங்குலி என்ற மேற்படி 70 வயது மதகுருவின் சடலம் காணப்பட்டது.
அவரது தலையானது கழுத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அவர் இரு நாட்களில் இத்தகைய மதவாத தாக்குதலில் பலியான மூன்றாவது நபராக விளங்குகிறார்.
இந்நிலையில் இந்த மதவாத படுகொலைகள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது 3 சந்தேகநபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா நகரிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொணடதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் மூன்றாவது சந்தேகநபர் மேற்கு ரஷாகி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற மதவாத படுகொலைகளுக்கு தாமே காரணம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ள நிலையில் அதனை பங்களாதேஷ் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமது நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இல்லை என அந்த அரசாங்கம் வாதிட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM