தாபரிப்பு பணம் செலுத்த தவறியவருக்கு 35 மாத கடூழிய சிறை

Published By: Digital Desk 4

09 Jan, 2020 | 05:06 PM
image

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் 3 இலட்சத்து 85,000 ரூபாய்  தாபரிப்பு பணம் செலுத்த தவறிய நபருக்கு 35 மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்னிலையில் இன்றைய தினம்  (09)  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் கிண்ணியா - குட்டிகராச்சி பகுதியைச் சேர்ந்த வஹார்தீன் நிஸ்புல்லா  எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

 2012 ஜனவரி மாதம் முதல் 2015 ஜூலை மாதம் வரை 43 மாதங்கள் மூன்று இலட்சத்து 85,000 ரூபா தாபரிப்பு பணம் செலுத்தாமல் தலைமறைவாக இருந்த நிலையில் திறந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் பொலிசாரினால் முன்னிலைப் படுத்தப் பட்ட போதே இக்கட்டளை  பிறப்பிக்கப்பட்டது. 

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50