பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் நேற்று மாலை சமூக ஊடகங்களில் விடுத்த அறிவிப்பையடுத்து பிரிட்டனின் அரச குடும்பத்தினர் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.
அவர்கள் இவ் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு குடுபத்தினருடன் ஆலோசிக்கவில்லை என்பது ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், மற்றும் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் ஆகியோரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் உடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. வித்தியாசமான அணுகுமுறையை எடுக்க முயற்சிக்கும் அவர்களின் விருப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இவை சிக்கலான பிரச்சினைகள் என்றாலும் அவை செயற்படுத்த நேரம் தேவை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் சில அரச கடமைகளைத் தொடரும் அதே வேளையில், நிதி ரீதியாக சுயாதீனமடைந்து ஒரு புதிய தொண்டு நிறுவனத்தை அமைப்பார்கள் என்று அரச குடும்பத்தினர் நம்புகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM