நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படும் என டில்லி உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து நிர்பயா தாயாரிடம் மகனுக்காக குற்றவாளியின் தாய் மடி பிச்சை கேட்ட சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி வைத்திய மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டில்லி பொலிஸார் கைது செய்தனர்.
ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப் பாடசாலையில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டில்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 4 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் முறையிட்டனர்.
குறித்த நீதிமன்றம் 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.
இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறைச்சாலையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது.
நிர்பயா கொலை குற்றவாளிகள்.
இந்நிலையில், தீர்ப்பிற்கு முன், உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளுள் ஒருவரான, முகேஷ் சிங்கின் தாயார் என் மகனை எனக்கு திருப்பி அளியுங்கள் என்றும், மகனுக்கு உயிர்பிச்சை போடும் படி நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார்.
ஆனால் இதனை மறுத்த ஆஷா தேவி, மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதிக்காக தாம் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருப்பாதாக தெரிவித்தார் இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM